அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு : பலி எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு.. 25 லட்சம் பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாமில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளதுடன் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தால் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 27 மாவட்டங்களை சார்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood 121 peoples death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->