"இறந்துவிட்டு மீண்டும் உயிர் பிழைப்பேன்" தனக்கு தானே சமாதி கட்டிக்கொண்ட மதபோதகர்.!
anthra church father died alert
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சர்ச்சில் நாக பூசனம் என்ற நபர் ஒரு மத போதகராக இருந்து வருகின்றார்.
இவர் திடீரென்று ஒரு நாள் பேசிய போது, "நான் இன்னும் பத்து நாளில் இறந்து விடுவேன். அதன் பின் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர் பிழைப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் இறந்து மீண்டும் உயிர் எழுவேன் என்று கூறிவிட்டு தனக்கு சமாதி கட்ட ஒரு குழியை தோண்டி வைத்து இருக்கிறார். அந்த குழிக்கு அருகில் அவர் இறந்துவிட்டது போல அவரே ஒரு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
மத போதகரின் இந்த விபரீத செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் நரபலி உள்ளிட்ட சம்பவங்கள் இறங்கி வரும் நிலையில் ஒரு நபர் தனக்கு தானே சமாதி வைத்துக்கொண்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
anthra church father died alert