தள்ளிப்போகும் 12ஆம் வகுப்பு தேர்வு.! கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
anthra 12th exam postponed
ஆந்திர மாநில கல்வி அமைச்சர் ஏ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆந்திரப் பிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு இடைநிலை தேர்வுகளுக்கு முன்னோக்கிச் செல்வதற்கான முடிவை உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கவலைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை இயல்புக்கு திரும்பிய உடன் இடைநிலை தேர்வுக்கான புதிய அட்டவணை வழங்கப்படும். இது நாளை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.
கொரோனாவின் தீவிரம் ஆந்திராவில் அதிகரித்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வை ரத்து செய்ய கோரி சமூக வலைதளங்களில் காலவரையற்ற போராட்டத்தை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
English Summary
anthra 12th exam postponed