கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் மீண்டும் ஒரு இளம்பெண் உயிரிழப்பு.!
Another woman death after eat briyani in kerala
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி (வயது 20). இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட அடுத்த சில மணி நேரங்களில் மாணவிக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே, கோட்டயம் மருத்துவக் கல்லூரி செவிலியர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒரே வாரத்தில் 2வது முறையாக தரமற்ற உணவினால் மற்றொரு மாணவி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Another woman death after eat briyani in kerala