அச்சுறுத்தும் கொரோனா! குஜராத்தில் ஒருவர் பலி! ஒரே நாளில் மூவரை இழந்த சோகம்!
another one person died due to corona in Gujarat
இந்தியாவில் கொரோனாவின் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய சற்றுமேனுந் நிலவரப்படி 370 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றுவரை நான்கு பேர் பலியான நிலையில் இன்று மகாராஷ்டிராவில் ஒரு 63 வயது முதியவர் பலியாக, இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
இதனிடையே பிகாரில் 38 வயது நபர் ஒருவர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் நேற்றே சிறுநீரக செயல்பாடு இல்லாமல் இறந்துவிட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கத்தார் நாட்டில் இருந்து திரும்பியவர் என அறியப்படுகிறார்.
இந்த நிலையில் குஜராத் சூரத்தினை சேர்ந்த 69 வயது முதியவர் மரணம் அடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. ஒரே நாளில் மூவர் பலியாகியுள்ளது கொரோனா பரவலின் தீவிரம், அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
English Summary
another one person died due to corona in Gujarat