அரைவேக்காடு நண்பர்களின் ஆபத்தான ஆலோசனை.. சானிடைசர் குடித்து மொத்தமாக பறிபோன உயிர்கள்.!!
andra pradesh young men died drinks sanitizer
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து, இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,38,871 ஆக இருக்கிறது. 35,747 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம், தனிமனித இடைவெளி கூறப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிச்செடு பகுதியில், மதுபோதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு விபரீத எண்ணம் தோன்றியுள்ளது. இதனையடுத்து இவர்கள் கள்ளசாராயத்தில் சானிடைசர் கலந்து குடிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக பத்திற்கும் அதிகமான சானிடைசர் வாங்கி, கள்ளசாராயத்துடன் சேர்த்து குடித்துள்ளனர். இதனைக்குடித்த சிறிது நேரத்திற்குள்ளவே, அனைவரும் உடல்நலக்கோளாறால் அவதியுற்று அலறி துடித்துள்ளனர்.
இதனையடுத்து அனைவரும் அடுத்தடுத்து மயக்கமடையவே, அனைவரையும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இதில், 10 பேர் தற்போது வரை பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
andra pradesh young men died drinks sanitizer