விடுமுறை தினம் என்றாலே சரக்குதான்.. அங்கிளை கழட்டிவிட்டு, ஆண்டிஸ் அலுச்சாட்டியம்..!
Andra Pradesh Woman Drinks Liquor Alcohol Enjoy Holiday
விடுமுறை தினத்தை குதூகலமாக களிக்க தோழிகள் ஒன்றாக சேர்ந்து மது அருந்திய வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தோழிகள் விடுமுறை நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து காரில் புறப்பட்டுச் சென்ற தோழிகள் அனைவரும், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இறைச்சியை தொட்டுக்கொண்டு மதுவை ஊற்றி குடித்துள்ளனர்.
இது குறித்த வீடியோ காட்சிகள் முகநூலில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மது அருந்தினால், காரை ஓட்டி வந்தது யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? என்பது தொடர்பாக ஆந்திர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுடன் இருந்த ஆண் நண்பர் காருக்கு வெளியே வீடியோ பதிவு செய்த நிலையில், காருக்குள்ளே இருந்த தோழிகள் மதுகுடிக்க, அருகில் ஒரு சிறுவன் இருந்துள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Andra Pradesh Woman Drinks Liquor Alcohol Enjoy Holiday