காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்து, உடலை எரித்த கொடூர கணவன்.! - Seithipunal
Seithipunal


காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில், அடையாளம் தெரியாத சடலம் பிணமாக எரிந்த நிலையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பதி நகர காவல் துறையினர், முதற்கட்டமாக சோதனை செய்ததில் எரியாமல் இருந்த தலைமுடியை வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளது பெண் என உறுதி செய்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, பெண் யார்? எதற்காக? யாரால்? கொலை செய்யப்பட்டார் என விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

இந்த விசாரணையில், எரித்து கொலை செய்யப்பட்ட பெண்மணி அங்குள்ள அலிபிரி பகுதியை சார்ந்த புவனேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாயமான தகவலும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்துள்ளனர். 

இந்த சோதனையில், அப்பகுதியை சார்ந்த ஸ்ரீ காந்த என்பவர், தனது காதல் மனைவி புவனேஸ்வரியை வீட்டில் கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்து வந்து எரித்துக்கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஸ்ரீ காந்தை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Tirupati Love Marriage Husband SriKanth Murder his Wife Bhuvaneswari Police Investigation 29 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->