தோழி பேசாததால் ஆத்திரம்.. கொலை செய்து, உடலை கால்வாயில் வீசிய பயங்கரம்.!
Andra Pradesh Gundur College Girl Anusha Murder by College Boy Friend Vishnu
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூரை சார்ந்தவர் அனுஷா (வயது 19). இவர் நரசராவ் பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். இவருடன் கல்லூரியில் படித்து வந்தவர் விஷ்ணு வரதன் ரெட்டி (வயது 19). இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக அனுஷா விஷ்ணுவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை மதியம் கல்லூரி முடிந்ததும் விஷ்ணு அனுஷாவை வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் என்று கூறி வாகனத்தில் அளித்து சென்றுள்ளார்.
இதன்போது, வழியிலேயே ஏன் என்னைவிட்டு விலகி செல்கிறாய்? என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விஷ்ணு அனுஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரின் உடலை ஓடையில் வீசியுள்ளார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து தானாக சென்று காவல் நிலையத்தில் சரண் அடையவே, காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அனுஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Andra Pradesh Gundur College Girl Anusha Murder by College Boy Friend Vishnu