தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி.. வனப்பகுதியில் விபரீதம்.. பெண் வீட்டாரின் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சித்தூர் யாதமரியை அடுத்துள்ள தெள்ளறால்லப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் திலீப்குமார் (வயது 28). இவருக்கும், இதே கிராமத்தை சார்ந்த பெண்மணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே, குடும்ப பிரச்சனை கடுமையாக எழுந்துள்ளது. 

இதனால் மனமுடைந்துபோன கள்ளக்காதல் ஜோடி அருகேயுள்ள வனப்பகுதிக்கு சென்று தற்கொலை செய்ய எலிமருந்தை உட்கொண்டுள்ளனர். பின்னர் பெண்மணி தனது குடும்பத்தாருக்கு விஷயத்தை தெரிவிக்கவே, இருவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். 

இதில் பெண்மணியை மட்டும் மீட்ட குடும்பத்தினர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததும், திலீப்பை சென்று காணுகையில் அவர் இறந்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Chittoor illegal Affair Couple suicide attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->