எனக்கு கிடைக்காத நீ.. யாருக்கும் கிடைக்கவே கூடாது... 17 வயது காதலனால், 19 வயது பெண் பலி.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் தூர்பள்ளி பகுதியை சார்ந்தவர் சண்முகம். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் கல்லூரி மாணவியாக இருந்து வரும் நிலையில், அங்குள்ள பூதளப்பட்டு பகுதியை சார்ந்த டெல்லி பாபு (வயது 17) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கோவிலில் வைத்து திருமனம் செய்துகொண்டு அவரவரின் இல்லங்களில் வசித்து வந்துள்ளனர். சில நாட்கள் கடந்த பின்னர், காதல் ஜோடியின் திருமணம் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது.

இருவரும் மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே, காயத்ரிக்கு மற்றொரு இடத்தில் வரணும் பார்த்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவலை அறிந்த காயத்ரி, தனக்கு கிடைக்காத காயத்ரி யாருக்கும் கிடைக்க கூடாது என்று, வயல் வெளிக்கு சென்ற பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்துள்ளான். 

இதனால் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிய காயத்ரியின் உறவினர்கள், டெல்லி பாபுவின் வீட்டினை சூறையாடி தீவைத்து கொளுத்தியுள்ளனர். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், டெல்லி பாபுவை தேடி வந்தனர். 

இந்நிலையில், விசாரணைக்கு பயந்த டெல்லி பாபு, சொந்த ஊரில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக தகவலை அறிந்த காவல் துறையினர், டெல்லி பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Chittoor girl Murder Love Issue boy Suicide and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->