இன்று காலை ஆந்திராவில் நடந்த பெரும் சோகம்! பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் 11 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகளில் 7 பேர் பலியாகியுள்ளதாகவும், பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள ஹோட்டலில் 22 கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் 7 பேர் பலியாகியதாகவும், 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் விஜயவாடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andra hotel fire accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->