மூன்று கல்யாணம்., கணவர்களுக்கு மொட்டையடித்த திரிஷாவும் அம்மாவும்.! பலே கில்லாடி ராணிகள் தலைமறைவு.!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் திரிஷா (வயது 24). இவர் மல்லிகார்ஜுன் என்பவரை திருமணம் செய்து சில மாதங்களில் அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார். வரும்போது, கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல் பல லட்சங்களை திரிஷா பறித்துக்கொண்டு வந்ததாக தெரிகிறது.

பின்னர், அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி என்பவரை இரண்டாவதாக திரிஷா திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரை கழட்டி விட்டது போலவே கழட்டிவிட்டு நகை பணத்தை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

தொடர்ந்து மூன்றாவதாக ரங்காபுரத்தை சேர்ந்த மகேஸ்வரர் ரெட்டி என்பவரை திரிஷா திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதற்காக, திரிஷா பெயரில் பேங்க் அக்கவுண்டில் ரூ 5 லட்சத்தை மகேஸ்வர் ரெட்டி டெபாசிட் செய்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்தது. 

ஓரளவு பணக்காராக இருந்த மகேஸ்வர் ரெட்டி இடம், பணமா கறக்க நினைத்த திரிஷாவின் தாயார் மேரம்மா, தனது மகள் பெயரில் வீடு நிலங்களை பதிவு செய்து கொடுத்தால் மட்டுமே திரிஷா உன்னுடன் இருப்பர், இல்லையெனில் எனது மக்களை வீட்டிற்கு அழைத்து எழுவேன் என்று மிரட்டியுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட மகேஸ்வர ரெட்டி, திரிஷா மற்றும் அவரின் தாயார் குறித்து விசாரணை நடத்தவே, இவர் ஏற்கனவே இருவரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இருவர் மீதும் வேதன் சர்லா காவல்நிலையத்தில் மகேஸ்வர் ரெட்டி புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள திரிஷா மற்றும் அவரது தாயாரை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andhra 3 marriage lady escape


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->