'எனது காதலன் சுஷாந்த் இல்லாத உலகு எனக்கு வேண்டாம்.' விபரீத முடிவை மேற்கொண்ட இளம்பெண்.!
An women suicide for sushanth
ஒரு டீன் ஏஜ் பெண் நடிகர் சுஷாந்த்தின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அவருடைய இறப்பினால் மனமுடைந்து டீனேஜ் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சட்டீஸ்கர் பகுதியில் பள்ளி படித்துவரும் டீன்ஏஜ் பெண் ஒருவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகை ஆவார். அவருடைய பாடல்களையும், படங்களையும் தனது மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு எப்பொழுதும் ரசித்துக் கொண்டிருப்பார்.
சமீபத்தில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அவரை மிகவும் சோகமாக வீட்டில் இருப்பவர்கள் கண்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவருடைய பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்கள் தங்களது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபடவே அவர்கள் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வீட்டில் ஆய்வு செய்ததில் அந்த சிறுமி எழுதிய செய்திக் குறிப்பு ஒன்றை கைப்பற்றினர். அதில் அந்தப் பெண், "சுஷாந்த் சிங் இல்லாத உலகத்தில் எனக்கு வாழ விருப்பமில்லை. நான் அவரை காதலித்தேன்." என்று எழுதி இருந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
An women suicide for sushanth