பலபேரை மருத்துவமனையில் உயிருக்கு போராட வைத்த இளம்பெண்.! காரணம் இதோ.!
an women make accident in haryana
ஒரு பணக்கார வீட்டு பெண் தன்னுடைய புத்தம் புது பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த ஐஸ்கிரீம் வண்டியின் மேல் எதிர்பாராதவிதமாக மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
ஹரியானாவில் வசிக்கும் 29 வயதான ரோஷினி அரோரா என்ற பெண் கைலாஷ் சிங் கிழக்கு பகுதியில் சப்னா சினிமா தியேட்டர் அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன்னுடைய புத்தம் புதிய பிஎம்டபிள்யூ காரில் வேகமாக வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த கார் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஐஸ்கிரீம் வண்டியின் மீது பயங்கரமான சத்தத்துடன் மோதியது. அந்த சம்பவம் சினிமா காட்சியை போல் இருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
அந்த அழகிய பெண் ஓட்டி வந்த அந்த கார் அந்த ஐஸ்கிரீம் வண்டியில் மோதியதில், அங்கே ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர் முகேஷ் குமார் மற்றும் சப்னா குமாரி மற்றும் ஹர்ஷித் கவர் ஆகிய நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காரை ஓட்டி வந்த ரோஷினியை கைது செய்தனர். அப்போது ரோஷினி தான் காரோட்டி வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்ததால் தான் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், தான் இந்த விபத்து நடைபெற்றது என்று கூறினார். கார் ஓட்டி வந்த போது அந்த பெண் குடிபோதையில் இருந்தாரா என்று காவல்துறையினர் பரிசோதித்த போது அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
English Summary
an women make accident in haryana