புகாரளிக்க சென்ற இளம்பெண்., அவிழ்த்துப்போட்டு சுய இன்பம் செய்த அதிகாரி.!
an inspector masturbating in-front of an women
உத்தரபிரதேசம் மாநிலத்தில் தியோரியாவில் அமைந்துள்ள ஸ்டேஷன் ஒன்றில் ஒரு பெண்ணின் முன்பாக சுயஇன்பம் செய்த காவல்துறை அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பட்னி காவல் நிலையத்திற்கு நிலப்பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் புகாரளிக்க வந்துள்ளார். அப்போது அந்த காவல் நிலைய அதிகாரி (SI) பீஷ்ம் பால் சிங் என்பவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.
இதனால், அந்த பெண் செய்வதறியாது திகைத்த போது அவருடைய கண்முன்னே பேண்ட்டை அவிழ்த்து சுய இன்பம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது செல்போனில் அதனை வீடியோவாக பதிந்துள்ளார்.
அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரில், ' நான் புகாரளிக்க சென்று இருந்தேன் அப்போது என்னை தன்னுடைய அறைக்கு வருமாறு அந்த அதிகாரி அழைத்து சென்றார். அதன் பின்னர் என்னிடம் அவர் தகாத முறையில் தொட ஆரம்பித்தார். அதை நான் தடுக்க முயற்சித்த போது என் முன்பே அவர் உடையை அவிழ்த்து சுய இன்பம் செய்ய ஆரம்பித்தார். இவர் மீது புகாரளிக்க வேண்டுமென அதனை நான் வீடியோவாக பதிந்தேன்' என கூறியுள்ளார்.
English Summary
an inspector masturbating in-front of an women