கருகிய நிலையில் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் மேலும் ஒரு பெண்ணின் பிணம்.!
an another dead body found on near priyanka reddy body founded place
பெண் மருத்துவர் ஒருவர் ஹைதராபாத்தில் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது,இந்நிலையில் மேலும் அதே பகுதியில் எறிந்த நிலையில் இன்னொரு சடலம் மீட்கப்பட்டு இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஹைதராபாத் மாவட்டத்திலிருக்கும், சம்ஷாபாத் என்ற பகுதியில் கால்நடை மருத்துவராக பிரியங்கா ரெட்டி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியின் சுவடு மறைவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அவர் எரித்துக் கொல்லப்பட்ட அதே பகுதியில் இருந்து சிறிது தொலைவில் மற்றொரு பெண்ணும் எரித்து கொலை செய்யப்பட்டு தற்போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த இரு கொலை சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஒரே மாதிரியாக இரண்டு பெண்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
English Summary
an another dead body found on near priyanka reddy body founded place