9 அல் கொய்தா பயங்கரவாதிகள் அதிரடி கைது.. மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. பரபரப்பு தகவல்.!
al qaeda Terrorist 9 Members Arrest in India Kerala and West Bengal
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் உலக வர்த்தக மையம் மற்றும் இராணுவ தலைமையகம் பெண்டகன் மீது கடந்த 2001 ஆம் வருடத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொலை செய்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கமான அல்கொய்தா பயங்கரவாதிகள் மேற்குவங்கம், கேரளா போன்ற பல மாநிலங்களில் தாக்குதல் மேற்கொள்ள இருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்தது.
இதன் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை காவல் துறை அதிகாரிகள், கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தமாக 9 பயங்கவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் இருந்த டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இலக்கியங்கள், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு துப்பாக்கிகள், வெடிக்கும் சாதனங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டது.
எர்ணாகுளத்தில் முர்ஷித் ஹசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசரப் ஹூசேன் மற்றும் முர்ஷிதாபாத்தில் நஜ்மஸ் சாகிப், அபு சுபியன், மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமால், அதிதுர் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டி வந்த நிலையில், டெல்லி மற்றும் காஷ்மீருக்கு சென்று ஆயுதங்கள் வாங்கவும் திட்டமிட்டு இருந்துள்ளனர்.
இவர்கள் இந்தியாவின் பல முக்கிய நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில், இது முறியடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
al qaeda Terrorist 9 Members Arrest in India Kerala and West Bengal