கைரேகை நிபுணி....... வடிவேல் பாணியில் அதிரி புதிரி பேட்டி கொடுத்த அகிலேஷ் யாதவ்.!!
akhilesh yadav speech about kairegai
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தனது கைரேகையை வைத்து தான் பல இடங்களை கைப்பற்றுவேன் என்று தெரிவித்திருந்தார்.
அகிலேஷ்யாதவின் தலைமையில் செயல்பட்டு வரும் சமாஜ்வாடி கட்சியின் நிகழ்ச்சிக்கு சென்ற அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, டெல்லிக்கு நான் பயணம் செய்து கொண்டு இருந்தேன்.
என்னிடம் கைரேகை பார்க்க தெரிந்த நபர் என்று கூறி அறிமுகப்படுத்திய நபர், எனது உள்ளங்கைகளை பார்த்துவிட்டு, வரும் 2022 ஆம் வருட உத்திரபிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
உங்களின் கடுமையான உழைப்பு 350 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியமைப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். ஆனால் அவர் கூறியதில் இருந்து ஒரு இடம் அதிகமாக 351 இடத்தில் வெற்றிபெற முடிவு செய்துள்ளேன். எங்களின் ஆட்சி அமைந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
akhilesh yadav speech about kairegai