நாளுக்குநாள் அதிகரித்து வரும் காற்று மாசு.,மோசமான நிலையில் தலைநகரம்.!
air pollution in delhi
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது, இதனால் அந்த மாநில மக்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள்.
பக்கத்துக்கு மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானாவில் தீ வைத்து எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால், டெல்லியை நோக்கி வீசும் காற்றில் மாசு அதிகரித்திருக்கிறது. இதுதொடர்பான நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.
வேளாண் கழிவுப் புகையால், டெல்லியில் சுவாசிக்கும் காற்றின் தரமானது மோசம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக துவாரகா பகுதியில் காற்றின் தரமானது 480 என மிகவும் மோசமான புள்ளி அளவில் உள்ளது. துவாரகாவைத் தொடர்ந்து ரோகினி, நேரு நகர், சிரிஃபோர்ட் ஆகிய இடங்களில் காற்றின் தரமானது மிக மோசமாக உள்ளது.