ராகுலை நிலை குலைய வைத்து, துபாய் சிறுமி….! வைரலாகும் நியூஸ்…..!
a young girl questioned Rahul Gandhi
காங்கிரஸ் கட்சியின் தலைவர், இரண்டு நாள் சுற்றுலாப் பயணமாக, துபாய் சென்றார். அப்போது, அங்குள்ள இந்தியர்களையும் சந்தித்தார். அப்போது ராகுல் கூறுகையில், தற்போது, இந்தியாவில், பா.ஜ.க. மதவாதத்தை திணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி வரும் போது, இந்த நிலைமை மாறும், என்றார்.
அப்போது, அவரிடம் துபாயில் வசிக்கும் 14 வயது சிறுமி, பேச வேண்டும், என்று கையைத் துாக்கினாள். ராகுல், அந்த சிறுமியிடம் மைக்கை கொடுக்கச் சொன்னார்.
அப்போது அந்த சிறுமி,
“மதவாதம் அதிகரித்து விட்டது, என்று சொல்லும் நீங்கள், குஜராத்தில் தேர்தல் நடைபெற்ற போது, ஏன் கோவிலுக்குள் சென்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ராகுல், “அனைத்து மதமும் சமம் என்பதற்காகவே, கோவிலுக்குள் சென்றேன்” என்றார்.
மீண்டும் அந்த சிறுமி, “ இது வரை, இந்தியாவில், 80 சதவீதம் காங்கிரஸ் ஆட்சி தான் நடைபெற்றது. அப்போது செய்யாததையா, இனி செய்து விடப் போகிறீர்கள்? என்று கேட்டார்.
இந்தக் கேள்வியால் ராகுல் திணறிப் போனார். பின், இந்த கேள்வி நிரலின் நேரலை நிகழ்ச்சி நிறுத்தப் பட்டது.
English Summary
a young girl questioned Rahul Gandhi