விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்: கணவரை கொடூரமாக கொன்ற மனைவி.!
A wife brutally murder her husband for divorce notice in Andhra
ஆந்திராவில் விவாகரத்து கேட்டதால் கணவரை இரும்பு ராடால் தாக்கி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக மனைவி கொலை செய்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே லக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து நாகேஸ்வரராவ் விவாகரத்து கேட்டு ஜெகதீஸ்வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து ஜெகதீஸ்வரி இதுகுறித்து கேட்பதற்காக கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஜெகதீஸ்வரி, அங்கிருந்தே இரும்புராடால் நாகேஸ்வரராவ் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மேலும் வலியால் நாகேஸ்வரராவ் சத்தம் போடாமல் இருக்க அங்குள்ள தண்ணீர் தொட்டியில், தலையை மூழ்கடித்துள்ளார்.
இதனால் நாகேஸ்வர ராவ் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து ஜெகதீஸ்வரி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நாகேஸ்வர ராவ் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாகேஸ்வர ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நாகேஸ்வரராவ் வீட்டிற்கு ஜெகதீஸ்வரி வந்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஜெகதீஸ்வரிடம் விசாரணை நடத்தியதில், கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ஜெகதீஸ்வரியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A wife brutally murder her husband for divorce notice in Andhra