மரக்கிளையால் பாதிக்கப்பட்ட மின் விநியோகம்.. ஊழியரின் செயல்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலம் நிஜாம்பூர் சதாசிவ்பேட் பகுதியில் மின் விநியோகமானது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவனித்த மின் அதிகாரிகள், மின்சார கம்பிகளுக்கு இடையில் மரக்கிளை உடைந்து விழுந்ததில், மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். 

இதனையடுத்து அப்பகுதிக்கு மின் இணைப்பை மின் மாற்றியில் முற்றிலும் துண்டித்த அதிகாரி, மின்சார கம்பியின் மேல் ஏறி ஆபத்தான வகையில், பாதுகாப்பு உபகரணம் இன்றி பயத்துடனும், மின்சேவையை வழங்கும் நோக்கத்துடனும் மரக்கிளையை அகற்றியுள்ளார். 

இதன்பின்னர் மின்விநியோகம் அப்பகுதிக்கு சீர்படுத்தப்பட்ட நிலையில், இந்த விஷயம் குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனைக்கண்ட பலரும் மின் ஊழியரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தாலும், தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் மாநில அரசால் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Telangana Nizampur Electricity Employee unsafe work remove tree part


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->