கள்ளக்காதலுடன் சேர்ந்து 4 வயதில் மகளை கொன்று புதைத்த தாய்.! ஆந்திராவில் பரபரப்பு.!
A mother and her illegal boyfriend who murder and buried her 4 year old daughter in Andhra
ஆந்திராவில் கள்ளக்காதலுடன் சேர்ந்து 4 வயது மகளை தாய் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் கல்யாணதுர்கா பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் மாருதி நாயக். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு மூன்று மகன்களும், பிந்து (4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மாருதி நாயக் அடிக்கடி தனது நண்பரான வினோத்தை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் கவிதாவிற்கும், வினோத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் மீது சந்தேகம் அடைந்த மாருதி நாயக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு காசி பேட்டை பகுதியில் குடி வந்தார்.
இந்நிலையில் கவிதா தனது மகளுடன் வினோத்துடன் மாயமானார். இதையடுத்து மாருதி நாயக் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்று, கவிதாவிடம் தனது மகள் எங்கே என்று கேட்டுள்ளார். இதற்கு கவிதா சரியாக பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த மாருதி நாயக் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வினோத் மற்றும் கவிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மகள் பிந்து தினமும் இரவில் அப்பா அப்பா என்று அழுது கொண்டே இருந்ததால், கழுத்தை இறுக்கி இருவரும் கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மகளைக் கொன்ற கவிதா மற்றும் கள்ளக்காதலன் வினோத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
English Summary
A mother and her illegal boyfriend who murder and buried her 4 year old daughter in Andhra