பள்ளி காதல்.. மகளின் காதலனை விஷம் ஊற்றி கொண்ட நபர்.. போலீசிடம் நாடகம்.!
a men murder and drama in police station
கர்நாடக மாநிலத்தில் குறப்பா என்ற நபர் காவல் நிலையத்தில் 21 வயது கல்லூரி மாணவர் மீது கடத்தல் புகார் கொடுத்தார். அதில், தனது மகளான பள்ளி சிறுமையை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் குறப்பாவின் மகள் மற்றும் அந்த கல்லூரி மாணவர் மல்லூ இருவரும் காதலித்ததும் இந்த காதல் குறப்பாவிற்கு பிடிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கை போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில், குறப்பாவின் மகளை பார்க்க அவரது காதலனான கல்லூரி மாணவன் மல்லூ வீட்டிற்கு வந்துள்ளான்.
அப்பொழுது குறப்பா அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பார்த்துவிட்டார்.இதனை தொடர்ந்து அந்த மாணவரை குறைப்பா சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது மகள் காதலனை காப்பாற்ற விஷம் குடித்துள்ளார். இதனை தொடர்ந்து, குறப்பா அதிர்ச்சி அடைந்து மகளின் காதலன் மல்லுவின் வாயிலும் விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளார்.
இருவரது சடலத்தையும் அங்கு இருக்கும் கிருஷ்ணா ஆற்றில் தூக்கி வீசிவிட்டு போலீசில் வந்து மகளை காணவில்லை என்றும், அவர் காதலனுடன் ஓடி விட்டார் என்றும் புகார் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
a men murder and drama in police station