மனைவியை விரட்டியடித்த கணவன்.! காரணத்தை கேட்டு தலையில் அடித்துகொள்ளும் பொதுமக்கள்.!
A men ignore his wife for chilly reason
பல குடும்பங்களில் ஆண் குழந்தைகள் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றனர். இருப்பினும், பல பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை மீதான மோகம் இன்னும் குறையவில்லை என்பதற்கு பின்வரும் சம்பவமே உதாரணம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்போலி பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஹோட்டல் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை வேண்டும் என்று அவர்கள் ஆசை கொண்டனர். ஒவ்வொரு முறையும் மனைவி பிரசவத்திற்கு செல்லும் பொழுதெல்லாம் மிகவும் ஆசையாக ஆண் குழந்தை பிறக்கும் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பாரப்பர்.
இருப்பினும் தொடர்ந்து பெண் குழந்தை யாகவே அவருடைய மனைவி பெற்றெடுத்தார். இதனால், அந்த கணவரும் அவருடைய குடும்பத்தினரும் அந்தப் பெண்ணின் மீது கடும் கோபத்திற்கு ஆளாகி இருந்தனர். அத்துடன் சில உறவினர்கள் அந்த கணவனிடம் உன்னோட மனைவியை விரட்டி விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால், உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கலகம் மூட்டினர்.
இதனால் நான்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த தனது மனைவியை விரட்டி விட்டு அந்த கணவன் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அந்த நான்கு பெண் குழந்தைகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். 13 ஆண்டுகாலம் கணவனோடு வாழ்ந்த அந்தப் பெண் எங்கு போவது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளார்.
இப்படிப்பட்ட வயதில் அனாதை ஆகிவிட்டோமே என்று கண்ணீர் விட்டு அழுது காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவனோடு பெண் வாழ்வதற்கு வழி செய்துள்ளனர்.
English Summary
A men ignore his wife for chilly reason