பணத்தாசையால், பாலியல் தொழிலுக்கு ஆளான பெண்கள்.! பழிவாங்கிய பெண்களால், சிக்கலில் மாட்டிய நபர்.!
A men arrested who cheated young girls
சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பசவராஜ் கலாசாட்(37) என்ற நபர் 'மெட்ராஸ் காஸ்டிங் இண்டர்நேஷனல் மாடலிங் ஈவெண்ட்ஸ்' என்ற பெயரில் ஒரு கம்பெனி நடத்தி வந்துள்ளார். இந்த கம்பெனி மூலமாக அபுதாபி, சீனா, சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் டான்ஸ் பார்களில் 20 வயதுள்ள இளம் மங்கையர்களுக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பல்வேறு சமூக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
இதனை நம்பிய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் இளம்பெண்கள் வேலை கேட்டு அவரை நாடியுள்ளனர். அந்த பெண்கள் எல்லாம் கடந்த ஜனவரி மாதம், ஊரடங்குக்கு முன்பாகவே துபாயில் கொண்டுபோய் விட்டு இருக்கின்றார். அங்கே சென்ற பெண்களுக்கு அவர் தெரிவித்தபடி டான்ஸ் பாரில் வேலை கொடுக்கவில்லை.
அதற்கு பதிலாக அந்த இளம் பெண்கள் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டனர். அங்கு சென்ற பிறகுதான் அந்தப் பெண்களுக்கு இது குறித்த விபரம் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்கள் தாயகம் திரும்ப முற்பட்ட பொழுது கொரோனா பாதிப்பு அதிகமாகி ஊரடங்கு போடப்பட்டது. இதனால், விமான சேவை தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே அப்பெண்கள் அந்த நாட்டிலேயே தவிர்த்து வருகின்றனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் இந்திய தூதரகத்தில் தங்களை ஏமாற்றிய பசவராஜ் என்ற நபர் மீது புகார் அளித்து தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பசவராஜை கைது செய்துள்ளனர். மேலும், அவருடைய பாஸ்போர்ட், ஆதார் கார்டு, உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முடக்கி இருக்கின்றனர்.
English Summary
A men arrested who cheated young girls