பொய்த்தது மனிதாபிமானம்.!! நடுரோட்டில் நடந்த கொலை., மக்கள் செய்த காரியம்.!! நாளை நமக்கும்.!! - Seithipunal
Seithipunal


 

ஏதோ ஒரு இடத்தில் விபத்தோ அல்லது ஒரு உயிருக்கு தீங்கோ ஏற்படும் பட்சத்தில் தங்களால் இயன்ற அளவிற்கு உதவி செய்ய முயலுங்கள் அல்லது காவல் துறையினருக்காவது தகவலை வழங்குங்கள்., நீங்கள் செய்ததே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். 

தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் நேற்று மாலையில் ஆட்டோ ஓட்டுனரும்., வாலிபர் ஒருவரும் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கடும் கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர்., மறைத்து வைத்திருந்த கத்தியால் வாலிபரை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதனை கண்ட அங்குள்ள மக்கள் சம்பவத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்., ஒரு நபர் கூட கொலையை தடுக்கவோ அல்லது காவல் துறையினருக்கு தகவல் வழங்கவோ முன்வரவில்லை., அனைவரும் அவர்களின் அலைபேசியில் வீடியோ மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தனர். 

சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர்., உடனடியாக இந்த தகவலை சக காவல் துறையினருக்கு வழங்கி அந்த ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தார். இரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த வாலிபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவசர ஊர்தியின் மூலம் இறந்த வாலிபரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த ஆட்டோ ஓட்டுனரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A MAN KILLED ON ROAD SIDE., PEOPLES CAPTURING VIDEO


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->