கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
A man commited to suicide Due To Covid
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பரிசோதனையும் செய்யப்பட்டது.அந்த பரிசோதனைகள் அந்த இளைஞருக்கு கொரோணா உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இனி தான் பிழைக்க மாட்டோம் என பயந்து அந்த வாலிபர் அந்த மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A man commited to suicide Due To Covid