குழந்தையில்லாத தம்பதியிடம் ரூ.5 இலட்சம் பணம் வாங்கி, குழந்தையை விற்பனை செய்த மருத்துவர்.!
a Maharashtra Mumbai Doctor Sale baby Police Arrest
குழந்தைகள் இல்லாத தம்பதியிடம் ரூ.ஐந்து இலட்சம் பணம் வாங்கி குழந்தையை விற்பனை செய்த மருத்துவரை காவல் துறையினர் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நலசெபரா பகுதியை சார்ந்தவர் ஜிதன் பாலா (வயது 48). இவர் மகப்பேறு கிளினிக் நடத்தி வரும் நிலையில், இவரின் கிளினிக் வரும் பெண்கள், குழந்தை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், அவரிடம் அனிதா (வயது 50) என்ற பெண்மணி தரகராக பணியாற்றி வந்த நிலையில், குழந்தையில்லாத தம்பதியை அழைத்து வந்துள்ளார். மேலும், அந்த தம்பதிகள் நாங்கள் எவ்வுளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம், எங்களுக்கு குழந்தை வேண்டும் என்று கூறவே, ரூ.5 இலட்சம் பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட மருத்துவர் கடந்த வாரம் பெண் குழந்தையை கொடுத்த நிலையில், அந்த குழந்தையை கடத்தி விற்பனை செய்துள்ளார். குழந்தையின் பெற்றோர்கள் குழந்தை மாயமானது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையில் உண்மை தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
a Maharashtra Mumbai Doctor Sale baby Police Arrest