மாணவியின் ஆடைகளை களைய சொன்ன தலைமை ஆசிரியர் மீது வழக்குபதிவு..!
A lawsuit was filed against the head teacher for telling a student to take off his clothes
மாணவியை சோதனை செய்வதாக கூறி மாணவி ஆடையை களைய சொல்லிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கனங்கூர் கிராமத்தில் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஸ்னேகலதா என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் செல்போன் எடுத்து கொண்டு வந்துள்ளார். அதனை கண்ட தலைமை ஆசிரியர் அந்த மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்வதாக கூறி ஆடைகளை களைய சொல்லியுள்ளார்.
மேலும், அவரை கட்டாயப்படுத்தியும் உள்ளார். இதனால், பயந்து போன அந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A lawsuit was filed against the head teacher for telling a student to take off his clothes