குடிபோதையில் பீடியை அணைக்காமல் வீசியதால் விபரீதம்.! குடிசை தீப்பிடித்து தொழிலாளி பலி.!
A laborer died after a drunkard threw a beedi without extinguishing it and the hut caught fire in Karnataka
கர்நாடக மாநிலத்தில் குடிபோதையில் பீடியை அணைக்காமல் வீசியதால் குடிசை தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள சாமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணய்யா. இவர் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கிருஷ்ணய்யா, பீடியை புகைத்து விட்டு, அதனை அணைக்காமல் தூக்கி வீசி உள்ளார். இதில் பீடி துண்டு படுக்கையில் விழுந்ததில் சிறிது நேரத்திலேயே படுக்கை முழுவதும் தீப்பிடித்து குடிசை முழுவதும் எரிந்துள்ளது.
மேலும் கிருஷ்ணய்யா மது போதையில் இருந்ததால் அவர் மீதும் தீ பரவியது. இதையடுத்து கிருஷ்ணய்யா சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணய்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணய்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A laborer died after a drunkard threw a beedi without extinguishing it and the hut caught fire in Karnataka