கனவுகளுடன் முதலிரவுக்கு சென்ற புதுமணப்பெண்.! கணவனின் மோசமான செயலால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற 30 வயது வாலிபர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். விடுமுறைக்காக தாயகம் திரும்பிய பாஸ்கருக்கு அவருடைய குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்தனர். ஊரடங்கு காரணமாக அமெரிக்கா செல்ல முடியாமல் பாஸ்கர் தவித்து வந்தார். அவருக்கு விருப்பம் இல்லாமலேயே பெற்றோர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்ணுடன் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் பல கனவுகளுடன்அந்தப் பெண் தங்களுடைய அழகிய அறைக்கு சென்றுள்ளார். 

அவருடைய கணவர் உடல்நிலை சரியில்லை என்று கூறி தட்டிக்கழித்துள்ளார். இதுபோல், ஒவ்வொரு நாளும் பல்வேறு காரணங்களை கூறி மனைவியை தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் தன்னுடைய பெற்றோரிடம் கணவர் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க, அவர்கள் பாஸ்கரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

அதன் பின்னர் பெற்றோர் பாஸ்கரை அழைத்து விசாரித்த பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் பணிபுரிந்த போது அங்கு ஒரு இளைஞருடன் அவர் நான்காண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், பெண்கள் மீது அவருக்கு ஈர்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட இருதரப்பு குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாயினர். பின்னர் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A husband ignored his first night with wife 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->