வகுப்பறையில் தனித்திருந்த பெண் செய்த விபரீத காரியம்.! பெற்றோருக்கு அவசர போன்கால்., ஓடி வந்து பார்க்கையில் பேரதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு படிக்கின்ற 14 வயது மாணவி ஒருவர், தனது பள்ளி வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் நொய்டாவில் இருக்கும், ஒரு பள்ளியில் ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதியன்று அந்த மாணவி வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனால், அப்பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து ஓடி வந்த பெண்ணின் பெற்றோர் மாணவியின் சடலத்தை கண்ட கதறியழுதுள்ளனர்.

அப்போது, பெற்றோர் பள்ளியில் தங்களுடைய மகளை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டனர் என குற்றம் சாட்டியிருக்கின்றனர் . இருப்பினும், சற்றும் அதை பொருட்படுத்தாத பள்ளி நிர்வாகம் அந்த பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு ,குடும்ப பிரச்சனையால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறி காவல் துறை உதவியுடன் அடக்கம் செய்துள்ளனர். 

மேலும் அவரின் தற்கொலை குறிப்பில் தனது சாவுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல, குடும்ப பிரச்சினையே காரணம் என்று எழுதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, அப்பெண்ணின் பெற்றோர் முதல்வருக்கு, எங்கள் மகளின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டறிய வேண்டும்.' என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A girl suicide in classroom in noida 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->