யாருமில்லா நேரத்தில் இளம்பெண் விபரீத செயல்.! திரும்பி வந்த பெற்றோருக்கு திடுக்.!  - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலத்தில், இருக்கும் இந்தூர் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒரு வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தியுள்ளார். மேலும், செல்போனில் மெசேஜ் அனுப்பி அந்த பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார்  

அந்த இளைஞரும் அவருடைய நண்பரும் நிறைய கிரிமினல் வழக்குகளில் சிக்கி இருக்கின்றனர்  இதையெல்லாம் தெரிந்து கொண்ட இளம்பெண் அந்த இளைஞரின் காதலை நிராகரித்துள்ளார். அத்துடன் தான் நிறைய படிக்க வேண்டும் என்றும், நிறைய கனவுகள் தனக்கு உள்ளது என்றும், தங்கள் மீது எனக்கு காதல் ஏற்படவில்லை என்றும் கூறி காதலை மறுதலித்து விட்டார். 

ஆனால், அந்த நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடந்த திங்கள் கிழமையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அந்தப் பெண்ணிடம் வந்து என்னை நீ காதலிக்க விட்டால் உன் குடும்பத்தையே நாசம் செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கின்றார். இதனால் பயந்துபோன அந்த பெண் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வெளியில் சென்ற பெற்றோர்கள் திரும்பி வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை சரியாக எழுதாததால் மகள் இப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டனர். 

ஆனால், அந்தப் பெண் தேர்வு முடிவில் 74 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருந்தார். அதன் பின்னர்தான் விசாரிக்கையில் அவருக்கு ஒருதலை காதலால் மிரட்டல் வந்து பயந்து உயிரை விட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குறிப்பிட்ட நபர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A girl suicide for one side love torched


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->