பழகும்போது பாசம்.. போட்டோ வந்துட்டா காசு.. இணையத்தளத்தில் அறிமுகமான நட்பூவின் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயை சார்ந்த 27 வயது பெண்மணிக்கு, கடந்த வருடத்தில் சமூக வலைத்தளம் மூலமாக ஆணொருவரின் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குள் நட்பு அதிகரிக்கவே, தங்களின் அலைபேசி எண்களை பகிர்ந்துள்ளனர். 

இதன்பின்னர் வாட்சப் செயலி மூலமாக உரையாடி வந்த நிலையில், அப்பெண் தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். பெண்ணிடம் இருந்து இலாவக பேசி புகைப்படங்களை பெற்ற கொடூரன், தனது சுய ரூபத்தை காண்பிக்க துவங்கியுள்ளான். 

அந்த பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் கேட்டு மிரட்டிய கொடூரன், பணத்தை தரவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால் அச்சமடைந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொடூரனை காவல் துறையினர் விரைந்து கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A girl Intimidation by culprit about Photo morphing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->