பெண்ணிற்கு பிரசவ வலி.. பிறந்த இரட்டை குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்வி மாணவர்களை மீட்ட சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த இரயில்கள் மூலமாக வெளிமாநிலத்தில் சிக்கித்தவித்த பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி நகருக்கு நேற்று முன்தினத்தின் போது சிறப்பு இரயில் இயக்கப்பட்டுள்ளது.

இந்த இரயிலில் காயத்ரி என்ற பெண்மணி கணவருடன் பயணம் செய்த நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள சிரைத்து இரயில் நிலையத்திற்கு முன்னதாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரயில்வே அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விஷத்தை தெரியப்படுத்தியுள்ளனர். 

இதனையடுத்து அடுத்து வரும் இரயில் நிலையத்தில் முன்னதாகவே அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு, பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இரட்டை குழந்தைகள் பெண்ணிற்கு பிறந்த நிலையில், குழந்தைகள் சிறிது நேரத்திற்கு உள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்தது. 

மேலும், குழந்தைகள் சுமார் 8 மாதத்தில் பிறந்துள்ளதால் உயிரிழந்ததாகவும், பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், பெண் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பிறந்து இறந்தது தம்பதிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl delivery twin babies and passed away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->