9 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்கார முயற்சி.. மதுரையில் பேரதிர்ச்சி.!
9 Year child girl sexual abuse attempt in Madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு வெள்ளையாம்பட்டி பகுதியில் 9 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியை சார்ந்த இளைஞர்கள் நவீன், கதிர், பீம், வீர திலீபன். சம்பவத்தன்று சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அந்த சமயத்தில், கஞ்சா மற்றும் மது போதையில் வந்த காமுகன்கள் சிறுமியை ஏமாற்றி பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் பதறிப்போன சிறுமி அலறியுள்ளார்.
இவரின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், நான்கு இளைஞர்களையும் கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
9 Year child girl sexual abuse attempt in Madurai