மேற்குவங்காளம் || ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து, 9 பேர் பரிதாப பலி..!
9 persons death in accident
ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ஒன்பது பேர் உயிரிழந்தர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த கோரவிபத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனை அடைகிறேன். காயமடைந்தவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் எனவும் தெய்ர்வித்துள்ளார்.
English Summary
9 persons death in accident