தாத்தாவுக்கு பணிவிடை செய்த சிறுமி.! பெருசால், கர்ப்பமான சிறுமி.!
85 years old men rape 15 year girl
புவனேஸ்வர் மாநகராட்சி உடைய துணை ஆணையர் வீட்டில் 15 வயது சிறுமி வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வீட்டில் அதிகாரியின் மாமனார் தனியாக இருந்துள்ளார். அவருக்கு வயது 85 அதிகாரி வேலைக்கு சென்றதும் சிறுமி பெரியவருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு கூடவே இருப்பார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த கிழவன் சிறுமியை ஆறு மாத காலமாக தொடர் பலாத்காரம் செய்து இருக்கின்றார். இந்த விஷயத்தை வெளியில் கூறினால் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று மிரட்டி இருக்கின்றார். இதனால், பயந்து போன சிறுமியை வெளியில் எதையும் கூறாமல் மன உளைச்சலில் சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று அந்த சிறுமி கர்ப்பம் ஆகி இருக்கின்றார். இதனை தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த அவலங்களை சிறுமி தெரிவித்து இருக்கின்றார்.
இதனால் அதிர்ந்து போன அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அதிகாரி மற்றும் அவரது மாமனார் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
85 years old men rape 15 year girl