கள்ளசாராயம் அருந்திய 6 பேர் பலி... 22 பேருக்கு தீவிர சிகிச்சை.. மேற்கு வங்கத்தில் நடந்த அவலம்..!
6 Persons death in West Bengal
கள்ளசாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் சிலர் மது அருந்தியுள்ளனர். அதன்பின், வீட்டிற்கு சென்ற அவர்களில் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கள்ளசாராயம் குடித்து பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
6 Persons death in West Bengal