குடும்பத்தை பழிவாங்க பக்கா பிளானுடன் சயனைடு..! 47 வயது பெண்ணின் பகீர் வாக்குமூலம்.!
6 members dead in one family at kerala
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டம் அருகே, கூடாத்தி கிராமத்தில் வாழ்பவர் டாம் ஜோஸ். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவர். இவர், சென்ற 2008ம் ஆண்டில் திடீரென இறந்து விட்டார். இதற்கு முன்னே, 2002ம் ஆண்டில் டாம் ஜோஸ்ன் மனைவி அன்னம்மா உயிரிழந்திருக்கிறார்.
அதே போல 2012ம் ஆண்டில் ஜோஸின் மகனான ராய் தாமஸ் என்பவர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். தாமஸின் மகள், 10 மாதமே ஆன நிலையில் அடுத்த சில மாதங்களிலே உயிரிழந்தாள். இதை தவிர, ஜோஸின் மைத்துனர் மேத்யூ மஞ்சாடியும் உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தொடர்ந்து, அடுத்தடுத்து, மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது குறித்து ஜோஸின் இன்னொரு மகனும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான ரோஜோ வடகரை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதன் காரணமாக, விசாரணை மேற்கொண்ட போலீசார், தற்போது தான் இதற்கு காரணமான ஒரு பெண் குற்றவாளியை கைது செய்தனர். ஜோலி அம்மா ஜோசப் என்று பெயருடைய அந்த பெண், ஜோஸின் மகன் ராய் தாமஸின் முதல் மனைவி ஆவார்.
தற்போது அவருக்கு 47 வயதிருக்கும், இவர் தனது முன்னாள் கணவன் ராய் ஜோசப்பின் குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில், கடந்த 12 ஆண்டுகளாக , திட்டம் போட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சயனைடு கலந்துகொடுத்து கொன்றுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
இதை தொடர்ந்து, ஜோலியை கைது செய்த போலீசார், அவருக்கு சயனைடு வழங்கிய நபர், சயனைடு கொள்முதல் செய்தவர் என்று அனைவரையும் கைது செய்திருக்கிறார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
English Summary
6 members dead in one family at kerala