மத்திய பிரதேசம்: லாரி மோதி கோர விபத்து - 6 பேர் பலி, 10 பேர் படுகாயம்
6 killed 10 injured Lorry accident in madhya pradesh
மத்திய பிரதேசத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள சத்ருண்டா பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சாலையோரமாக பேருந்திற்காக பலர் காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்தவர்களின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 20 பேர் மீது லாரி மோதியதில் சிலர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
6 killed 10 injured Lorry accident in madhya pradesh