பெண்ணை நம்பி சென்ற ஆண்! 6 பெண்களால் அரங்கேறிய விபரீதம்!! - Seithipunal
Seithipunal


டெல்லி ரோகிணி செக்டார் பகுதி காவல் நிலையத்தில் ஆண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை 6 பெண்கள் மிரட்டி பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார். புகார் அளித்த ஆண், கடந்த 3 மாதங்களாக, பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார். அவரை அப்பெண் சமீபத்தில் தனியிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த இடத்து சென்றதும், அறைக்குள் மேலும் சில பெண்களும், 2 ஆண்களும் இருந்துள்ளனர். அவர்கள் அந்த ஆணை மிரட்டி, நிர்வாணமாக்கி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இதனை சமூக வலைதளைங்களில் வெளியிடுவோம் எனக் கூறி, ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இறுதியாக, ரூ.10 லட்சம் மட்டுமே தன்னால் தர முடியும், என அவர் தெரிவித்துள்ளார். இதன்பேரில் பணத்தை எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு, தப்பி ஓடிவந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் 6 பெண்களை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 girls arrest in delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->