6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.! புரட்டி எடுக்க போகும் மழை.!! அச்சத்தில் மக்கள்.!!!
6 districts red alert for heavy rain
கேரள மாநிலத்தில் வரும் ஜூலை 18,19 மற்றும் 20 ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. எனவே அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
இடுக்கி (ஜூலை18, 19 மற்றும் 20 ), மலப்புரம் (ஜூலை18, 19 மற்றும் 20 ), வயநாடு மற்றும் கண்ணூர் (ஜூலை 19), எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் (ஜூலை 20). மாநில பேரிடர் மீட்பு ஆணையம் ஜூலை 18 முதல் ஜூலை 20 வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது.
English Summary
6 districts red alert for heavy rain