ஆடு மேய்க்க சென்ற 58 வயது பெண்ணிற்கு காட்டில் நேர்ந்த கொடூரம்! அதிர்ச்சியில் மூழ்கிய கிராமத்தினர்.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகே கடம்பூர் பகுதிக்கு அருகேயுள்ள சின்னகுன்றி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதன். அவருடைய மனைவி மாதம்மாள். 58 வயது நிறைந்த இவர் தனது வீட்டில் ஏராளமானஆடுகள் வளர்த்து வந்தார். மேலும் அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக 
 காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 

அவ்வாறு நேற்று காலையிலும் ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மேய்ச்சல் முடிந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு  மாலையில் வீடு திரும்பிகொண்டிருந்தார். 
அப்பொழுது மாதம்மாளுடன்அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த கெஞ்சன், சின்னத்தாயும் ஆடுகளை மேய்க்க வந்தனர். அப்போது காட்டுப்பகுதியிலிருந்து யானை ஒன்று  பிளிறியபடி அவர்களை நோக்கி ஓடிவந்துள்ளது . இதனை கண்ட 3 பேரும் அச்சத்தில் அலறியடித்து ஓடியுள்ளார்.மேலும் அவர்களை யானை துரத்தி சென்றுள்ளது.

அப்பொழுது கெஞ்சனும், சின்னத்தாயும் யானையிடம்  தப்பி ஓடிவிட்ட நிலையில் மாதம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை யானை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்துள்ளது . இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த  அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டிவிட்டு, இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு இறந்த வனத்துறையினர் மாதம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

58 women dead by attacking elephant


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->