பீகார்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பரிதாப பலி.. கள்ளசாரத்தை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


கள்ளசாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் கடந்த ஆறாண்டாக முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தி வருவதும், சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நாலந்தா மாவட்டம், மான்பூர் தானா என்னும் இடத்தில் கள்ளசாராயம் அருந்தியவர்களுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் உயிரிழந்தனர்.

பீகாரில் கள்ளசாராயம் அருந்தி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவம் சமீபத்தில் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people who drank illicit liquor died in Bihar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->