5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. புரட்டிப் போடப் போகும் மழை.. பதற்றத்தில் மக்கள்.!!
5 district red alert in Kerala
கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. ஜூன் 8 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி அதிக அளவில் மழை செய்யவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கேரளாவில் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் வரும் ஜூலை 18,19 மற்றும் 20 ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் :
எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், பத்தினம் திட்டா, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. எனவே அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
English Summary
5 district red alert in Kerala