4 வயது பச்சிளம் குழந்தை பாலியல் பலாத்காரம்.. கிணற்றில் சடலம்.. கண்ணீரில் பெற்றோர்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சதர்பூரில் 4 வயதுள்ள சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 28 ஆம் தேதியன்று மாமாயகியுள்ளார். சிறுமியை காணாது தேடி வந்த பெற்றோர், சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குழந்தை மே மாதம் 29 ஆம் தேதியன்று அங்குள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் சிறுமியின் உடலை அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, காமுக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 year child sexual abuse and murder in Madhya Pradesh body found in well


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->