4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 2 சிறுவர்கள் கைது.. அதிர்ந்துபோன காவல்துறை.! - Seithipunal
Seithipunal


4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சமப்வம் நாட்டினையே உலுக்கிய நிலையில், இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்தடுத்த பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றது. 

இந்நிலையில், ஹத்ராஸில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 9 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான தகவல் சிறுமியின் தந்தையின் மூலமாக காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதிர்ச்சி தகவலாக சிறுவர்களின் கொடூரம் உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்த நிலையில், இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 YEAR CHILD GIRL SEXUAL ABUSE IN UTTAR PRADESH HATRAS DISTRICT


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->